Skip to main content

பர்செனல் லோன் வாங்கும் முன், இந்த கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

Personal loan on your mind?

வாழ்க்கையில் பெரிதாக எதையேனும் வாங்கும்போது நிதியுதவி பெற பர்சனல் லோன்கள் ஒரு பிரபலமான தேர்வாகும். பல்வேறு தேவைகளுக்கு பணத்தை ஏற்பாடு செய்வதற்கான வசதியான வழியை அவை வழங்குகின்றன - உங்களின் அடுத்த பயணத்திற்கு நிதியளிப்பது முதல் வீட்டைப் புதுப்பித்தல் வரை, உங்களுக்குத் தேவைப்படும்போது பணத்தை உறுதி செய்வதற்கான சாத்தியமான ஒரு வழியாகும். ஆனால் பர்சனல் லோன் என்பது ஒரு கடமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய இரண்டும் ஆகும். அதனால்தான், ஒரு பர்சனல் லோனைப் பெற விரும்புபவர், கடன் வாங்க முடிவெடுப்பதற்கு முன், கிடைக்கக்கூடிய அனைத்து விருப்பங்களையும் முழுமையாக ஆராய்ந்து பகுப்பாய்வு செய்வது மிகவும் முக்கியம்.

இருப்பினும், நீங்கள் அந்த பயணத்தைத் தொடங்குவதற்கு முன், உங்கள் தேவையை மதிப்பீடு செய்து சில கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள் புதிய பெர்சனல் லோன் பெறத் தயாராக இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்த இந்தக் கேள்விகளைப் பார்க்கவும்.

 
  1. எனக்குத் தேவையான கடன் தொகை எவ்வளவு, அது எனக்கு எப்போது தேவை?

குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கிரெடிட் வரம்புகள் ஒவ்வொரு கடன் வழங்குநராலும் வரையறுக்கப்படும் மற்றும் உங்கள் பர்சனல் லோன் வரம்பு உங்கள் கடன் தகுதியைப் பொறுத்தது. பர்சனல் லோன்கள் என்பவை 10,000 ரூபாய் முதல் தொடங்கி 30,00,000 ரூபாய் வரை கூட இருக்கலாம். இது கடனளிப்பவர் மற்றும் கடன் வாங்கியவர் & திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், கட்டைவிரல் விதியின்படி உங்கள் சக்திக்கு மீறி வாழாதீர்கள், அதாவது நீங்கள் எளிதாக திருப்பிச் செலுத்தக்கூடிய தொகைக்கு மட்டுமே கடனைப் பெறுங்கள். மேலும், உங்கள் கடன்-வருமான (DTI) விகிதம் எல்லா நேரங்களிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்புகளுக்குள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கடன் வாங்குபவர்கள் குறைந்த DTI விகிதத்தைக் கொண்டிருப்பது பொதுவாக கடன் வழங்குபவர்களால் விரும்பப்படுகிறது.
உங்கள் நிதியைப் பெறுவதற்கான காலக்கெடு, கடன் தொகை, நீங்கள் தேர்ந்தெடுக்கும் கடனளிப்பவர் மற்றும் அவர்களின் விண்ணப்ப செயல்முறை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. சில கடன் வழங்குபவர்கள் உங்கள் விண்ணப்பத்தைச் செயல்படுத்தலாம் மற்றும் அதே நாளில் உங்கள் தொகையை மின்னணு முறையில் மாற்றலாம், சிலருக்கு 48-72 மணிநேரம் ஆகலாம், மற்றவர்களுக்கு அதிக நேரம் ஆகலாம். உங்கள் கடனுக்கான காலக்கெடுவைத் தீர்மானிக்கும்போது இந்தத் தாமதங்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வதை உறுதிசெய்யவும்.

  1. எனது லோனின் காலம் என்னவாக இருக்கும்?

பர்சனல் லோன் வழங்கப்பட்ட பிறகு, நீங்கள் 30 நாட்களுக்குள் EMI-களை தொடங்க வேண்டும். உங்கள் வட்டி விகிதம் மற்றும் மாதாந்திர தவணைகள் ஆகிய இரண்டும், கடன் தொகைக்கு கூடுதலாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் கடனின் காலத்தால் பாதிக்கப்படும். பர்சனல் லோன்கள் பொதுவாக குறுகிய கால கடன்களாக இருப்பதால், நீங்கள் தேர்வு செய்யும் கடனாளி மற்றும் உங்கள் கிரெடிட் ஹிச்டோரி பொறுத்து, திருப்பிச் செலுத்தும் காலம் 12 முதல் 60 மாதங்கள் வரை இருக்கும்.

  1. எனது கடன் வட்டி விகிதத்தை என்ன காரணிகள் தீர்மானிக்கின்றன?

உங்கள் CIBIL ஸ்கோர், கடன் தொகை மற்றும் கடன் காலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உங்கள் கடன் வட்டித் தொகை தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, சிறந்த CIBIL ஸ்கோரைக் கொண்டிருப்பது, சாத்தியமான குறைந்த வட்டி விகிதத்தைப் பாதுகாக்க உதவும். உங்கள் CIBIL ஸ்கோர் மற்றும் ரிப்போர்ட் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கடன் சலுகைகளை வழங்கும் ஆன்லைன் தளமான CIBIL மார்க்கெட்ப்ளேஸை நீங்கள் பார்க்கலாம்.

  1. வேறு ஏதேனும் கட்டணங்கள் மற்றும் சார்ஜ்கள் உள்ளனவா, எப்போது செலுத்த வேண்டும்?

நீங்கள் பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கும்போது, கடனளிப்பவரைப் பொறுத்து உங்கள் கடன் தொகையில் செயல்முறைக் கட்டணமாக 2-3% வரை வசூலிக்கப்படும். மேலும், உங்கள் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அதாவது அதன் கடன் செலுத்தும் காலத்திற்கு முன், 2-3% வரை முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் இருக்கலாம்.

  1. கடனுக்கு விண்ணப்பிக்க என்ன ஆவணங்கள் தேவை?

நீங்கள் சம்பளம் பெறும் ஊழியரா அல்லது சுயதொழில் செய்பவரா என்பதன் அடிப்படையில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது வெவ்வேறு கடன் வழங்குபவர்களுக்கு பல்வேறு வகையான ஆவணங்கள் தேவைப்படலாம். வழக்கமாக, கடன் வழங்குபவர்கள் உங்கள் அடையாளம், குடியிருப்பு விவரங்கள், வருமானச் சான்று மற்றும் உங்கள் கடனின் நோக்கம் ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் கிரடிட் ஹிஸ்ட்ரியை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவர்கள் உங்கள் கடன் வாங்கும் நடத்தையையும் மதிப்பீடு செய்கிறார்கள்.

  1. பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கும் போது எனது CIBIL ஸ்கோர் என்ன பங்கு வகிக்கிறது?

உங்கள் CIBIL ஸ்கோரை அறிந்துகொள்வது, எந்தவொரு கிரெடிட் லோன் விண்ணப்பதாரரும் அவர்கள் தகுதி பெறுவதை உறுதிசெய்வதற்கான முதல் படியாகும். பெரும்பாலான கடன் வழங்குநர்கள் கடன் வாங்குபவர்களை அவர்களின் கடன் மற்றும் திருப்பிச் செலுத்தும் ஹிஸ்ட்ரியின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறார்கள். அவர்கள் சிறந்த CIBIL ஸ்கோருடன் கடன் வாங்குபவர்களைத் தேடுகிறார்கள். ஒரு நல்ல கிரெடிட் ஹிஸ்ட்ரியை வைத்திருப்பது, நீங்கள் நம்பகமான மற்றும் ஒழுக்கமான கடன் வாங்குபவர் என்பதை உறுதிப்படுத்துவதால், முழு ஒப்புதல் செயல்முறையையும் விரைவுபடுத்த உதவுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் CIBIL ஸ்கோர் அதிகமாக இருந்தால், கடனுக்கான ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பர்சனல் லோன் என்பது உங்கள் நிதித் தேவைகள் மற்றும் வாழ்க்கை மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க உங்களுக்குத் திட்டமிட உதவும் ஒரு சிறந்த கருவியாகும். இந்தக் கேள்விகளைப் பயன்படுத்தி உங்கள் தனிநபர் கடன் தேவையை சரிபார்ப்பது சிறந்த மற்றும் தகவலறிந்த முடிவை எடுக்க உதவும்.

Disclosure: 

This post only contains educational information. No financial, tax or legal advice.

This information is for educational purposes only and we do not guarantee the accuracy or completeness of this information. This information does not constitute financial, tax or legal advice and you should consult your own professional adviser regarding your situation. This website may contain links to third party websites. We are not responsible for their content or data collection. Trademarks used in this material are property of their respective owners and no affiliation or endorsement is implied.