உலகில் உங்களுடைய நிதி குறிக்கோள்களைப் பூர்த்தி செய்ய அல்லது அவசரகாலத்தில் பண நெருக்கடியைப் பூர்த்தி செய்ய கடன் உங்களுக்கு உதவுகிறது, உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது கடன் வசதிகளை அணுகுவதை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். இது குறிப்பாக இன்றைய தலைமுறையினர் மற்றும் மில்லினியல்களுக்கு பொருந்தும் உண்மை ஆகும், இவர்கள் தங்கள் பெற்றோரை போல் இல்லாமல், கிரெடிட் கார்டுகள் மற்றும் கடன்களை மனதார ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் கடன்-தேடுபவர்கள், ரொக்கத்திற்கு-பதில்-கடன்-மாற்றம்-செய்பவர்கள். விரல் நுணியில் கடன் அணுகுவதற்கான ஆலோசகர்கள்.
நுகர்வோரின் நடத்தைப் பற்றிய கடன் வழங்குநர்களின் எச்சரிக்கை
இருப்பினும், கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் மற்றும் பல்வேறு வகையான கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கும்போது கடன் வழங்குநர்களும் வங்கிகளும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, விண்ணப்பதாரர் தனது கடன் ஒப்பந்தத்தை முடிவு வரை நிறைவேற்றுவார் மற்றும் ஒவ்வொரு முறையும் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் கடன் கொடுப்பார்கள். இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப, வாடிக்கையாளர்களின் கடன் சுயவிவரத்தில் நிறுவப்பட்ட மற்றும் அதிக CIBIL மதிப்பெண் பிரதிபலித்த, மற்றும் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கான நிரூபணத்துடன் உள்ள வாடிக்கையாளர்களை அவர்கள் நம்பிக்கையுடன் இணைப்பார்கள்.
இது உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை கடன் எழுத்துறுதி மற்றும் ஒப்புதல் செயல்பாட்டில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
நேர்மறை கடன் சுயவிவரத்தின் முக்கிய நன்மைகள்
கடன் உணர்வுள்ள நுகர்வோருக்கான அவர்களின் முயற்சியில், கடன் வழங்குநர்கள் வாடிக்கையாளர்களுக்கு நேர்மறையான கடன் சுயவிவரம் மற்றும் அதிக CIBIL மதிப்பெண் மூலம் அதிகளவில் வெகுமதி அளிக்கின்றனர். எவ்வாறு என்பதை இங்கு பார்ப்போம்:
விரைவான கடன் ஒப்புதல்கள்: உங்கள் CIBIL மதிப்பெண் என்பது உங்கள் கடன் சுயவிவரம் மற்றும் கடந்தகால திருப்பிச் செலுத்தும் நடத்தை ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும், மேலும் உங்கள் கடன்-தகுதியின் சிறந்த குறிகாட்டியாகும். உங்கள் CIBIL மதிப்பெண் அதிகமாக இருப்பதால், நீங்கள் அதிக கடன்-தகுதியுடையவர் — இதைத்தான் கடன் வழங்குநர்கள் தேடுவார்கள். இது அவர்களுக்கு விரைவான கடன் முடிவுகளை எடுக்க உதவுகிறது, இதன்மூலம் நீங்கள் விரைவான கடன் ஒப்புதலைப் பெற முடியும்.
அதனால்தான் அதிக CIBIL மதிப்பெண்ணை உருவாக்குவதன் மூலமும் பராமரிப்பதன் மூலமும் உங்கள் கடன்-உணர்வை வெளிப்படுத்த இது ஒரு கருவியாக உள்ளது. இந்த கடன் வாய்ப்புகளைப் பெறுவதற்கு நீங்கள் ஆர்வமாக இருந்தால், உங்கள் கடன் அணுகல் நிறுவப்பட்ட உங்களுடைய கடன் சுயவிவரம் மற்றும் CIBIL மதிப்பெண்ணைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதைப் பராமரிக்க உதவும் சில உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளன, இதனால் வாய்ப்பு வரும்போது நீங்கள் கடன்-உணர்வுடன் கடன்-வாங்க தயாராக இருப்பீர்கள்.
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில், நீங்கள் அதிக CIBIL மதிப்பெண்ணை உருவாக்கவும் மற்றும் பராமரிக்கவும் முடியும். உங்கள் கடன் போக்கில் கவனம் செலுத்துங்கள் மற்றும் நல்ல கடன் பழக்கத்தை வெளிப்படுத்துங்கள், இதன்மூலம் உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது கடன் பெற தகுதியுடையவர்களாக இருப்பீர்கள். இது கடன் அணுகலைப் பெற உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் கடன்-உணர்வு போக்கிற்கு வெகுமதி பெறவும் உதவும்.
Disclosure:
This post only contains educational information. No financial, tax or legal advice.
This information is for educational purposes only and we do not guarantee the accuracy or completeness of this information. This information does not constitute financial, tax or legal advice and you should consult your own professional adviser regarding your situation. This website may contain links to third party websites. We are not responsible for their content or data collection. Trademarks used in this material are property of their respective owners and no affiliation or endorsement is implied.