Skip to main content

அமைதியான மற்றும் கடன்-உணர்வுடன் நிதி நெருக்கடியை சமாளியுங்கள்

image

நமது அன்றாட திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கியல்பிற்கு நாம் பழக்கப்பட்டு இருக்கும் நிலையில், சமீபத்திய COVID-19 தொற்றுநோய் போன்ற சூழ்நிலைகள் நம் வாழ்க்கையை சீர்குலைக்கலாம், இது நம் மன அமைதியையும் தனிப்பட்ட நிதிகளையும் ஒரே மாதிரியாக பாதிக்கலாம். கடந்த சில வாரங்களில், நம்மில் பெரும்பாலோர் நமது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தி வருகிறோம், நமது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்கிறோம், அதே நேரத்தில் நமது வேலையினுடைய பொறுப்புகளை சமமான திடீர்வேகத்தில் நிர்வகிக்கின்றோம்.

எனினும், உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் நிதி நெருக்கடிகளின் சமீபத்திய எழுச்சி ஆகியவற்றால், நம்முடைய தனிப்பட்ட நிதிகளை மதிப்பிடுவதும், இந்த நிச்சயமற்ற காலங்களில் கிடைக்கக்கூடிய வளங்களை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தேடுவதும் நம் அனைவருக்கும் முக்கியமானதாகும். குறிப்பாக நாம் கடன்களை ஏற்கனவே பெற்றிருந்து, திடீரென்று நமது கடன் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால், இது நமது தனிப்பட்ட வாழ்க்கையையும் செலவுகளையும் பாதிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

நீங்கள் நிதி நெருக்கடியில் சிக்குவதற்கான வாய்ப்பைக் கண்டறிந்தால், உங்கள் கடன் கடமைகளை நிர்வகிக்கவும் மேலும் நேர்மறையான கடன் சுயவிவரத்தைப் பராமரிக்கவும் முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு நீங்கள் எடுக்க வேண்டிய சில உதவிக்குறிப்புகள் இங்கே உள்ளது.

  • மார்ச் 27, 2020 அன்று ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு, கடன் வழங்குபவர்களுக்கு கால கடன்கள், சில்லறை கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் மூலதனக் கடன்களின் கீழ் வட்டி செலுத்துதல் ஆகியவற்றுக்கு 3 மாத காலத்திற்கு தவணைகளை திருப்பிச் செலுத்துவதில் கடன் வாங்குபவர்களுக்கு தளர்வு வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. தற்காலிக கால அவகாசத்தைத் தேர்வு செய்வது உங்கள் கடன் வரலாறு அல்லது CIBIL அறிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இது ஒத்திவைக்கப்பட்ட கட்டணம் மற்றும் அதில் நிலுவைத் தொகைகள் மற்றும் திரட்டப்பட்ட வட்டி ஆகியவை தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம், எனவே நீங்கள் இறுதியில் பணம் செலுத்த வேண்டும். உங்கள் கடன் வழங்குநரின் தனிப்பட்ட கடன் கொள்கைகளுக்கு தயவுசெய்து அவர்களை அணுகுங்கள்.
  • நேர்மறையான கடன் சுயவிவரத்தைப் பராமரிப்பதற்கு சரியான நேரத்தில் செலுத்தும் கட்டணங்கள் ஒரு முக்கியமான காரணியாகும், மேலும் உங்கள் மாத வருமானம் பாதிக்கப்படாவிட்டால், உங்கள் கிரெடிட் கார்டு பில் மற்றும் EMI களையும் சரியான நேரத்தில் தொடர்ந்து செலுத்துவது என்பது முக்கியமாகும். மாற்றாக, நீங்கள் ஒரு கட்டணம் செலுத்துவதை தவற விடுவீர்கள் என்று நினைத்தால், ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி வேறு ஏதேனும் திருப்பிச் செலுத்தும் விருப்பத்தேர்வுகள் மூலம் உங்கள் கடன் EMI -களுக்கான தற்காலிக கால அவகாசத்தைப் பற்றி விவாதிக்க உங்கள் கடன் வழங்குநரை அணுகுங்கள்.
  • தற்போதைய சூழ்நிலையில், உங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய தேதிகளை விட குடும்பத்தின் நல்வாழ்வு முன்னுரிமை பெறுகிறது, ஆனால் இங்கே ஒரு உதவிக்குறிப்பு உள்ளது. உங்களுடைய கிரெடிட் வெளிப்பாட்டைக் குறையுங்கள், உங்கள் செலவினங்களை ஒரு கிரெடிட் கார்டுக்கு ஒரே கட்டணம் செலுத்த வேண்டிய தேதியுடன் மட்டுமே கட்டுப்படுத்துங்கள் - இது உங்கள் கட்டணங்களை சிறப்பாக நிர்வகிக்க உதவும்.
  • சராசரியாக, உங்கள் கடன் நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும், ஆனால் அவசரநிலை அல்லது நிதி நெருக்கடி ஏற்பட்டால், உங்கள் கிரெடிட் கார்டு பில்லில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை செலுத்துவதை நீங்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும், முழுத் தொகையையும் உங்களால் முடிந்தவரை விரைவில் செலுத்தவேண்டும் என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும். (குறிப்பு: இதை மேலே குறிப்பிட்டுள்ள தற்காலிக கால அவகாசத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.)
  • எதிர்காலத்தில் ஏதேனும் லோன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் உங்களுடைய கடன் கடமைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் மாத வருமானம் பாதிக்கக்கூடும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் கடன் வெளிப்பாட்டை அதிகரிக்காதீர்கள் மேலும் நீங்கள் நிர்வகிக்கக்கூடிய அல்லது திருப்பிச் செலுத்தும் திறனைக் காட்டிலும் அதிகமான கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பெற வேண்டாம்.
  • குறிப்பாக இப்போது, உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை தொடர்ந்து கண்காணிக்கவும். தவறான தகவல் அறிகுறிகளுக்கு உங்கள் அறிக்கையை சரிபார்க்கவும். உங்கள் CIBIL மதிப்பெண் உங்கள் கடன் சுயவிவரத்தின் பிரதிபலிப்பாகும், மேலும் உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது கடன் அணுகலைப் பெறுவதற்கு இது ஒரு கருவியாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் தவறான தகவல்கள் உங்கள் மதிப்பெண்ணைக் குறைத்து, உங்கள் கடன் அணுகலைத் தடுக்கலாம். உங்கள் கடன் மதிப்பெண் பாதிக்கப்படாமல் இருக்க நீங்கள் எல்லா நேரங்களிலும் கடன்-உணர்வுடன் கவனமாக இருக்க வேண்டும்.
  • பட்ஜெட் மற்றும் ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். இந்த சூழ்நிலை உங்கள் வருமானம் மற்றும்/அல்லது நிதிகளை பாதிக்கும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் தினசரி அல்லது மாதாந்திர பட்ஜெட்டில் இருந்து சிலவற்றை நீக்கிப் பாருங்கள்.

கஷ்ட காலங்களில், நாம் சாத்தியமாக அமைதியுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு ஆரோக்கியமான கடன் சுயவிவரத்தைப் பராமரித்து, உங்கள் கடந்தகால கட்டணங்கள் சிறப்பாக இருந்திருந்தால், ரிசர்வ் வங்கி அறிவித்த தற்காலிக கால அவகாசம் போன்ற நிலைமை உங்கள் ஒட்டுமொத்த கடன் சுயவிவரத்தை பாதிக்காது. உங்களால் முடிந்தவரை நல்ல கடன் போக்கைத் தொடருங்கள். கடன்-உணர்வுடன் இருங்கள், நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் கூட உங்கள் கடன் சுயவிவரத்துடன் இணைந்திருங்கள்.

 >> இப்போதே பதிவு செய்ய இங்கே கிளிக் செய்து உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையுடன் உங்கள் கடன் சுயவிவரத்துடன் இணைந்திருங்கள்.

Disclosure: 

This post only contains educational information. No financial, tax or legal advice.

This information is for educational purposes only and we do not guarantee the accuracy or completeness of this information. This information does not constitute financial, tax or legal advice and you should consult your own professional adviser regarding your situation. This website may contain links to third party websites. We are not responsible for their content or data collection. Trademarks used in this material are property of their respective owners and no affiliation or endorsement is implied.