Skip to main content

கடன் மோசடி மற்றும் அடையாளத் திருட்டில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள 4 படிகள்

யூனியன் பட்ஜெட் அறிவிப்புகள் தொலைத் தொடர்பு பார்வையில் மிக முக்கியமான இலக்குக் கட்டத்தை கொண்டிருந்தன. 50 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் இப்போது இணைய அணுகலைக் கொண்டுள்ள நிலையில், மொபைல் தரவு பயன்பாடு 2018 இல் முந்தைய ஆண்டை விட 144% அதிகரித்துள்ளது. இந்த இலக்குக் கட்ட சாதனைகள் மூன்று முக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை: மலிவான ஸ்மார்ட்போன்கள் கிடைப்பது, நியாயமான விலையில் மொபைல் தரவு அணுகல் மற்றும் பல பிராந்திய மொழிகளில் தொலைத் தொடர்பு சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆகும்.

எனினும், நுகர்வோர் இணைப்பு அதிகரிப்பதால், நாம் ஆன்லைன் தரவைச் சேமித்து பகிரும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். நமது மொபைல் போன்களில் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் அக்கவுண்ட் தகவல்கள் நிறைந்துள்ளன. ஆன்லைன் மோசடி செய்பவர்கள் இதை தான் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் அதிநவீன கருவிகளைக் கொண்டு ஃபிஷ், விஷ் மற்றும் ஃபார்ம் செய்ய நம் தரவை எளிதில் ஹேக் செய்ய முடியும், மேலும் நம் அக்கவுண்ட்டிலிருந்து ஒரு பெரிய தொகை பற்று வைக்கப்படும்போது அல்லது தவறான கிரெடிட் கார்டு பில் கிடைக்கும்போது மட்டுமே நம்மால் அதைக் கண்டுபிடிக்க முடியும்.

இந்த விஷயத்தில் சிக்கல்களின் மூலக் காரணம் உண்மையில் விழிப்புணர்வு இல்லாதது தான்.

இதனால், நாம் நிதி விவரங்கள் மற்றும் கடன் தகவல்களை கையாளும் விதத்தில் இன்னும் கொஞ்சம் விழிப்புடன் இருக்க வேண்டும். மோசடி செய்பவர்களை விட ஒரு படி மேலே இருக்கவும், கடன் மோசடிக்கு பலியாவதைத் தவிர்க்கவும், உங்கள் ஆன்லைன் அடையாளத்தைப் பாதுகாக்கவும் நீங்கள் எடுக்கக்கூடிய சில படிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • பொது wi-fi-இல் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்கவும்: பொது wi-fi அணுகலின்போது ஆன்லைனில் கட்டணம் செலுத்துவது அல்லது டிரான்ஸ்பர் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் சாதனத்தை wi-fi உடன் இணைக்கும்போது, காற்று அலைகள் ஒளிபரப்பாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு ஹேக்கர் (அதே ரௌட்டருடன் இணைக்கப்பட்ட) இந்த காற்று அலைகளை ‘கேட்கவும்’ மற்றும் உங்கள் பரிவர்த்தனையில் தலையிட்டு சேதப்படுத்தவும் முடியும். நீங்கள் ஒரு முக்கியமான குறுகிய-நேர பரிவர்த்தனை செய்ய விரும்பினால், செல்லுலார் நெட்வொர்க்கைத் தேர்வு செய்யவும்.
  • ஆன்லைனில் உங்கள் தனிப்பட்ட விவரங்களின் வெளிப்பாட்டைக் குறைக்கவும்: உங்கள் தனிப்பட்ட ஆவணத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதற்கு முன்பு நீங்கள் நன்றாக யோசித்திருக்கிறீர்களா? மோசடி செய்பவர்கள் உங்கள் PAN, ஆதார் கார்டு, அக்கவுண்ட் எண் மற்றும் கார்டு எண்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் பெயரில் லோன் அக்கவுண்ட் கூடத் திறக்கலாம். சேகரிப்பு முகவர்கள் அழைக்க தொடங்கும் வரை உங்களுக்கு இது பற்றி தெரியாது. எச்சரிக்கையுடன், புத்திசாலித்தனமாக இருந்து மற்றும் உங்கள் விவரங்களை பாதுகாக்கவும்.
  • உங்கள் விவரங்களை மறைக்க குறியாக்கம் மற்றும் டோக்கனைசேஷனைப் (எழுத்திலக்க அடையாளம்) பயன்படுத்தவும்: சமீபத்தில் ரிசர்வ் வங்கி விசா மற்றும் மாஸ்டர்கார்டு போன்ற கார்டு நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டோக்கனைசேஷன் (எழுத்திலக்க அடையாளம்) சேவைகளை வழங்க உத்தரவிட்டது. டோக்கனைசேஷன் (எழுத்திலக்க அடையாளம்) உங்கள் 16 இலக்க கார்டு எண்ணை குறியாக்கம் செய்ய உதவுகிறது, இதனால் இது வணிகர்களுக்கு வெளிப்படுத்தப்படாது, மேலும் இது கண்டிப்பாக உங்கள் கார்டு வழங்குநரிடம் மட்டும் இருக்கும். நீங்கள் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் போது உங்கள் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான மற்றொரு வழி, மொபைல் வேலட்டை பயன்படுத்துவதாகும், இது கார்டை சேமிக்கவும், கட்டணங்களை டோக்கனைஸ் (எழுத்திலக்க அடையாளம்) செய்யவும் உதவும்.
  • உங்கள் கடன் மதிப்பெண்ணை தவறாமல் கண்காணிக்கவும்: உங்கள் கடன் மதிப்பெண் மற்றும் அறிக்கையை கண்காணிப்பது உங்கள் பெயரில் திறக்கப்பட்ட அனைத்து லோன் அக்கவுண்ட்களையும் கண்காணிக்க எளிதான வழியாக இருக்கும். அறிக்கையில் பல பிரிவுகள் இருந்தாலும், உங்கள் ‘அக்கவுண்ட் தகவல்’ பிரிவு, நீங்கள் இன்றுவரை பெற்ற அனைத்து கடன் விவரங்களையும் கொண்டிருக்கும். இந்த பகுதியை துல்லியத்தன்மைக்கு சரிபார்க்கவும், நீங்கள் உங்களுக்கு சொந்தமில்லாத ஒரு அக்கவுண்ட் இருப்பதை உணர்ந்தால், அது அடையாள திருட்டாக இருக்கலாம். வருடத்திற்கு ஒருமுறை உங்களுக்கு ஒரு இலவச CIBIL அறிக்கை கிடைக்கலாம், எனவே உங்கள் கடன் சுயவிவரத்தை கண்காணிக்கத் தொடங்குங்கள். உங்கள் CIBIL அறிக்கையை தவறாமல் கண்காணிக்க ஒரு படி மேலே சென்று சந்தாவைத் தேர்வு செய்யவும்.

நிதி விவரங்களைப் பாதுகாப்பது, குறிப்பாக கடன் தகவல்களைப் பாதுகாப்பது முக்கியமானதாகும். ஏன்? அதிக CIBIL மதிப்பெண் உங்களுக்கு விரைவான, மலிவான கடன் அணுகலைப் பெற உதவும். சமரசம் செய்யப்பட்ட ஒரு கடன் சுயவிவரம், உங்கள் கடன் அணுகலை எதிர்மறையாக பாதிக்கக்கூடும்.

நீங்கள் எப்போதாவது கடன் மோசடி அல்லது அடையாள திருட்டுக்கு பலியாகியிருந்தால், நீங்கள் உடனடியாக இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:

  1. உங்கள் கடன் வழங்குநரைத் தொடர்புக் கொண்டு, மோசடி குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கவும். இது கிரெடிட் கார்டு அக்கவுண்ட் என்றால், உடனடியாக உங்கள் கார்டை முடக்கவும்.
  2. போலீசாரிடம் FIR பதிவு செய்யுங்கள்.
  3. மோசடி பரிவர்த்தனை (அது CIR-இல் தோன்றினால்) அகற்றப்பட்டு, அதற்கான விவரங்கள் கடன் பணியகத்திற்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய கடன் வழங்குநரை தொடர்புக் கொள்ளவும். விழிப்புடன் இருக்கவும். செயலூக்கத்துடன் இருக்கவும். உங்கள் நிதி இலக்குகள் அதைப் பொறுத்ததிருக்கும்.

Disclosure: 

This post only contains educational information. No financial, tax or legal advice.

This information is for educational purposes only and we do not guarantee the accuracy or completeness of this information. This information does not constitute financial, tax or legal advice and you should consult your own professional adviser regarding your situation. This website may contain links to third party websites. We are not responsible for their content or data collection. Trademarks used in this material are property of their respective owners and no affiliation or endorsement is implied.